புதன், அக்டோபர் 09, 2019

போங்காட்டம்




நல்லாயிருக்கே உன் விதி
அருவி பாட்டுக்குத்
தலைகீழா விழுமாம்
நனைந்து தலை உதறி துண்டு பிழிந்து கரையேற நீ
குச்சி வைத்து தட்டி
ஒழுங்குபடுத்துகிறேன் பேர்வழியென \
துளிதண்ணீரை உடம்பு ருசிக்காமல் 
அலைய நானா
காடு மணந்து கிடக்குமாம்
பூப்பூவாய் மகரந்தத்தை
இழுப்பிக்கொண்டு
தேனுறிஞ்சிப்பறக்க நீ
என்றோ காய்ந்த பட்டையை
உரித்துப்போடக்கூட
ஆளில்லாத பட்டமரமாக
பட்டாம்பூச்சியைத் தொட்டறியாது 
நிற்க நானா
இதெல்லாம்
கருக்குழியில் தள்ளி களத்தில் இறக்கிவிட்டா
சொல்வது
வருமுன்னர் சொல்லியிருந்தால்
இந்த ஆட்டத்துக்கு நான்
சரிப்படமாட்டேனென மறுத்திருப்பேனே


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...