புதன், அக்டோபர் 07, 2020

தூரத்தில் வேர் நுனி

புதிய பசிய கறிவேப்பிலையை ஈர்க்கிலிருந்து சரசரவென உருவி கொழுந்துமல்லித் தழைகளையும் சேர்த்துக் கொதிக்கும் ரசத்தில் போடும் கையா

நீரூற்றிக் களையெடுத்தது *********************************************
மழுமழுவென மின்னும் பீங்கான்
தொட்டியிலிருந்து கிள்ளிவந்த மணிபிளாண்டுக்கு
பழைய பால் பாட்டிலோடும் பேதமில்லை
*********************************************

நட்சத்திரம் இறைந்த துப்பட்டா வாங்கியபோது நினைக்கவில்லை
வானத்தை இப்படிப் போர்த்திக் கொள்ளமுடியுமென்று ************************************** தினம் நடக்கிற வழிதான்
தினம் வருகிற வெயில்தான்
என்றாவதுதான்
நிமிர்ந்து பார்க்க வாய்க்கிறது
கை வைத்து மறைத்தபடியாயினும்
*************************************
விதைத்தது நீ என்று உலகு அறியும்
வேரின் நுனி
உன் கையில்
என்ற ரகசியம் எனக்கு மட்டும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...