புதன், செப்டம்பர் 23, 2020

நந்தியாவட்டையின் ஒளிர்பச்சை

 உப்பு ரொட்டியின் உடைந்த தூளைத் தொட்டுத் தொட்டு ஒற்றிக்கொள்வது கூட மீட்சிதான் பத்திய நாவுக்கு

*********************************************************

தாழ்ப்பாளின் துரு
காத்திருக்கும் தனிமை
காலணியின் சேறு
வாசலோரத் தெருநாயின் அரைத்தூக்க
முனகல்
அதிகாலையோ
அந்திமாலையோ
உனக்கென்ன
**********************************
மறந்தேபோய்விட்ட
பழையவீட்டு
நந்தியாவட்டைக் கிளையை வளைத்தபடி
நிற்கிற கனவு
எத்தனை ஒளிர் பச்சை
அதன் இலைகள் என்கிறாய்
அதிசயம்போல்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...