செவ்வாய், ஜூலை 13, 2021

அரூபவல்லி

 எல்லோரும்

அலையில் கால்நனைத்து
ஆடைகளைப்
பற்றிக்கொள்ளும்
மணலை அலசி
மீண்டும் அலையாடி
மணல் உதறிக்
கொண்டாடிக்கொண்டிருந்த
புகைப்படங்கள் எதிலும் அம்மா இல்லை

எல்லோர் கைப்பை,காலணி இத்யாதிகளைக் காத்தபடி
அவள் இருந்த இடம் புகைப்படத்துக்குள் அடங்கா தூரம் ********************************************
அவர்களும் ஒருநாள்
ஒளிர்கண்களால்
நேரடியாக நம்மைப் பார்த்தார்கள்
கருகருவெனத் தலைநிறைந்த முடி முன்நெற்றியில் வழிய
மொழுமொழுவென்ற
விரல்களால் நம் முகம் வருடினார்கள்
இடுக்கு விழுந்த ,தெத்திய இயற்கையான பல்மினுங்க சிரித்தார்கள்
நினைவில் தங்கிய சித்திரத்தில்
வயது அவர்களின்
எல்லாவற்றையும் பறித்துக்
கொண்டுவிட
இளையவர்கள் யாரோவாகக்

கிழவர்களே உறவாயினர்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...