வெள்ளி, அக்டோபர் 02, 2020

சுவடுகளை விழுங்குதல்

 

தெரியும்
திறந்துகிடக்கும் வாசலைத் தாண்டி
சுவடின்றி நீ கடந்தாலும்
அது எப்படியோ தெரியும்
உனக்கும்

 

************************************************

 

 

கூடத்தில் படிந்துவிடும்
மணல்பார்த்து
ஆச்சர்யந்தான்
அதுவும் திகைத்துப் போய்விடுகிறது

கூட்டிக்குவித்ததும்



******************************************

 

 

எனது கடவுள் இவன்தான்
எனது சாத்தான் இவன்தான்
எனது மது  இதுதான்
எனது விஷம் இதுதான்
வரையறுத்துவிடவே முடியவில்லை

முடியவில்லையா

தெரியவில்லையா

தெரியவில்லை

 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...