புதன், செப்டம்பர் 25, 2019

வரிசைகளின் அடுக்கு

ஒரு குருவி
ஒரு அணில்
ஒன்றுமாற்றி ஒன்று
ஏறி இறங்கித் தாவிக்கொண்டிருக்கின்றன
கைப்பிடிச் சுவரில் பதிந்திருக்கும் 
கண்ணாடித்துண்டு மேல்
என் அச்சம்

 *********************************************************
சேனை நடந்த பாதையின் இடிகற்கள்
கலங்கல் குட்டையின்மேல்
ஒவ்வொன்றாய் நீ போட்டவைதானோ

*********************************************************
வரிசைகளின் அடுக்குக்குள் மூச்சு முட்டுகிறது
உலர்த்திய சிறகுகள்
காற்றில் அலைகின்றன
எதுவாக இருக்கிறோமென்ற குழப்பம் தீர்வதற்குள்
ஹா...அடைபட்டாய் கூண்டில்!
பறந்துவிடுவாயோ எனும்
சந்தேகம் உன் இருப்பின் கிரீடமானது.

********************************************************
சாத்தான் இருப்பதை நம்பவைக்க
ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறாய் தேவனே
ஒரு அடிபட்ட புறாவுக்கு 

பெருஞ்சேனை அனுப்பித்தாக்கும் உன்னை
நம்புகையில்
அவனும் நீயும் வேறெனப்
பிரிப்பதுண்டோ


********************************************
பொழுதுபோகாமல் 
வண்ணத்துப்பூச்சிகளைப் 
பிய்த்துப் போட்டுக்கொண்டிருக்கும் பாத்திரத்தையே 
பிச்சைகோரி நீட்டுகிறாயே
என்னிடம் எதிர்பார்ப்பதென்ன
கருணையையா


*********************************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...