புதன், செப்டம்பர் 23, 2020

மரு வைக்காத இரட்டை வேடம்

 இருந்தது என்றாய்

இருந்தது என்ற
இறந்தகாலத்துக்காக வருந்தவா
இருந்தபோது
நான் அறியாமல்
இருந்ததற்கு வருந்தவா
இல்லை
எப்போதும்போல் இருந்துவிடவா

***********************************************
வெங்காய வடகத்தைக்
கிள்ளிக்கிள்ளி வைக்கும்போதுகூட
திட்டமான
இடைவெளிகளில் வைப்பவள்
இதை ஏன் இப்படி
கொசகொசவென்று வைத்தாளோ
குறுக்கே ஒரு அம்புக்குறி இட்டாயோ
புரிந்தது

**************************************************
நிஜத்தில் ஒரு மரு கூட
வைத்துக் கொண்டு
வரமாட்டேன் என்கிறது
இன்பமும் துன்பமும்
*************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...