செவ்வாய், அக்டோபர் 23, 2018

இலை அழுத துளி

அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன் 
என்கிற 
உன் சொல்லில் நிற்கிறது முள்

*****************************************************

செம்மண் பள்ளமெங்கும் நீர்
இறைத்து ஊறியதோ
இரைந்து ஊறியதோ
***********************************************
சரளைக்கல் நொறுங்க நொறுங்க 
குறுக்கு மறுக்காக 
ஓடிக்கொண்டிருக்கின்றன சக்கரங்கள்
பூசி மெழுகியபின் வரலாம்
உறுத்தாது
*******************************************************

எத்தனை துளிர்க்கையிலும் 
மலரா முகத்துக்காக 
இலை அழுத துளி 
மழை மாலையில்
************************************************************
ஒரு இளஞ்சிரிப்போடு
கடந்துவிடுகிறீர்கள் பேரன்பை
கொடுஞ்சொற்களுக்கு தாரை வார்க்க 
முழு இரவை ஏந்தியபடி
***************************************************
உரசுகிறது வேர்
துண்டுப்பலகையின் துணையில் 
பள்ளத்தைக் கடக்க முடிகையில்
*****************************************************************




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...