ஞாயிறு, ஜனவரி 29, 2012

இப்போது பரணில்...

மல்லிகை கனகாம்பரம் 
நெருக்கித் தொடுக்கும் நேர்த்தி...
இழைகோலமா
கரைபதம் 
கருகா முறுவல் பக்குவங்கள் 
பொடிகளின் 
அரைபதம்,இடிபதம் 
கொதிமணம்
கொண்டறியும் குறைகள் ,
வகை வகையாய் வழிமுறைகள்..
**************************************.
பொட்டலம் ,பொதிகள் 
சுமந்த 
கழுதை முதுகின் 
கற்பூரப் பொட்டலம்.

சனி, ஜனவரி 28, 2012

நிறம் தந்த சாமி


 

அமர்ந்து எழுகையில் 
வண்ணத்துப்பூச்சி 
தடவிச் செல்லும் 
மினுங்கல் பொடியா?
சந்திரபிறை பொழியும் 
இரவின் ஒளித்துளியா?
ஆரஞ்சு குழம்பாய் 
அரங்கேறும் 
கதிர்ச்சொட்டா?
விரிந்த நீளத்தின்
மேக நீலங்களில்
ஏதோ ஒரு நீலமா?
துளிர்ப்பச்சை....
இலைப்பச்சை....
வெளிர்ப்பச்சை....
என்னை வரைந்த தூரிகை 
எதில் தோய்ந்தது...? 
 

ஆறாவது பூதம்

இடம் பொருள் 
அறியாக்காற்று 
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக 
தீக்குச்சி நுனியில் 
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே 
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம் 
சிறு குடுவை 
அல்லது 
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?  
 

சொற்கள்


என்னோடு இருந்தன ....
இல்லாமல்  இருந்தன..
இல்லாமலும் ....
இருந்தன!
இருந்தாலும் 
இல்லாவிட்டாலும் 
என்னோடு, 
எனக்கானவையாய் இருந்தன...
இருக்கும் வரை  
இருக்கும்!

வியாழன், ஜனவரி 26, 2012

நினைவின் சரத்தில்

அந்த மனோரஞ்சிதம் 
வருடங்கள் கடந்தும்  
வாடாமல் சிரிக்கிறது !
பிரத்யேக மணமும் 
பெயரற்ற நிறமும் கூட 
மங்குவதேயில்லை...
வெல்வெட் துணியிலிட்ட 
முத்துமாலைகூட
சற்றே 
பழுத்த வெண்மையில் ...
ஆனால் 
என் ஒற்றை மனோரஞ்சிதம் 
முணுமுணுத்த பாடல் வரிகளையும் 
வெளுத்த கனவுகளையும் 
இதழ்களாய் இணைத்தபடி 
வாடாமல்....  

வாசம்

 
சாலைப்புறம்
இரவுதோறும் கிடக்கும் 
சில எலிகள் 
காலை வரும் 
காகத்தை ஏமாற்றாமல் .....
வேறொருபுறம்
காக்கை கிடைக்கலாம் 
ஏதோ ஒன்றுக்கு 
இரையாக....
இடையில் நாசி பொத்தியே 
நடந்து பழகிவிடுகிறது!
 

செவ்வாய், ஜனவரி 24, 2012

எல்லா இடமும் சதுர அடி

கருவைக்காடு 
இருந்திருக்கலாம்...
அறிந்த ,அறியாப் பெயர்களுடன் 
மரங்கள் நின்றிருக்கலாம் ....
எங்கள் கிராமம் போல 
வயல் நடுவேயோ ...
தோப்புகள் தாண்டியோ 
இருந்திருக்கலாம் ...
இன்று நாற்புற மதில் தவிர்த்து 
வீடுகள் சூழ நிற்கும் 



.

.

 

மயானம்..!.
அண்டை வீடுகளின் 
தொலைக்காட்சிப் பாடல் 
கூத்தனுக்குப் 
பழகியிருக்கலாம் 
நாற்றமும் சப்தமும் 
பழகிய நம்மைப் போல ..

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...