வெள்ளி, செப்டம்பர் 27, 2019

ஊருக்கு வராதவள்

தாழம்பூ பார்டரா கோபுரமா
எதுவென்று சரியாக நினைவில்லை
மஞ்சுஅக்காவின் முகூர்த்தப்புடவை
ஆனால்
சந்தனத்தில் சிகப்புக்கரையிட்டது
சிகப்பு என் ரத்தம்டி
எனக்கலங்கிய மஞ்சுஅக்கா
இப்போதெல்லாம்
ஊருக்கே வருவதில்லையாம்
பெரியம்மா 

பெருமையாகத்தான் சொல்கிறாள்
****************************************************

சொல்ல சொல்லக்கேட்காமல் 
ஓடிக்கொண்டேயிருக்கும் மரங்களை 
சன்னலுக்குள்ளிருந்து 
வெறுமையாக நோக்கும் கண்களில் 
எதையாவது கண்டுபிடித்துவிடுவாயா என்ன
மினுக்கும் கண்ணிலிருப்பது
ஒளியா கண்ணீரா 

என்றே தெரியாத நீ

******************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...