வெள்ளி, செப்டம்பர் 27, 2019

மூடியது பூரணம்

ஒரு கரண்டி பொய்யில்
ஒருகரண்டி புனைவைத்
தூவிப் பிசைந்து 
ஒரு கரண்டி நெய் சேர்த்து 
இன்னும் உருட்டி
ஜோடனைக்குழவியை அழுத்தி இழைத்து
உள்ளே வைத்து மூடியது 
பூரணம்
எத்தனை செரிக்குமோ அத்தனை விழுங்கு
*****************************************************************
யாரோ அளந்து 
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
 நீங்கள் எத்தனை அடி
 வைக்க வேண்டுமென்பதை
உங்கள் கால்கள்
தடுமாறுகின்றன
கேட்பதா
நடப்பதா என

****************************************************************
எவ்வளவு நாளாயிற்று
உன்னைப்பார்த்து"
பேருந்தின் நெரிசலுக்கு நடுவே
யாரோ யாரிடமோ
உணர்வு பூர்வமாகச் 
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
அடையாளம் காணவியலாக் கூட்டத்தில் 

அந்த வாஞ்சைக்கென்றே 
ஒரு முகம் பார்க்கவைத்த வார்த்தை
நான்பார்த்து வெகுநாளான 

யாராவது உடனே வாருங்களேன்
அதை நான் என் குரலில் 

சொல்ல வேண்டும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...