புதன், செப்டம்பர் 25, 2019

கொத்துப்பூ

ஆடிப்பட்டத்தின் அத்தனை காயையும்
விதைத்து சுற்றிவரத்தக்க
எங்கள் கொல்லையின் இல்லாமை
மா வாகத்தான் இருந்தது
ஊரைக்கூட்டும் மணங்கொண்ட முருங்கையைக்
கட்டுகட்டாக
அள்ளிக்கொடுத்துவிட்டு
உதிர்ந்த நாலு மாம்பிஞ்சை
பதிலியாகப் பெற்றுக்கொள்ளும்
மாப்பிரியை எங்கள் ஆத்தா
குட்டைக்கன்று ஒன்றை
வைத்த மறுவருடத்திலிருந்து
சுற்றிச்சுற்றி
அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருந்தாளாம்
எங்காவது ஒரு கொத்து
பூ விட்டிருக்குமோ என்று
தோரணத் தொங்கலுக்குதான்
லாயக்கு
நாலு செருப்பைக்கட்டி தொங்கவிடு
ரோஷத்தில் காய்க்கட்டும்
அம்மாளுவின் ஆலோசனைக்கு
கண்ட செருப்பெல்லாம் என்னோடு போகட்டும்
என ஆத்தா விசிறிய வருடந்தான்
உதிர்ந்ததாம்
கொத்துப்பூ

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...