வெள்ளி, செப்டம்பர் 27, 2019

எனைத் தேடும் மேகம்

விழத்தான் போகிறேனென்று தெரியும்
வேடிக்கை பார்ப்பார்களென்றும் 
தெரியும்
அவர்களோடு 
நீயும் மறைந்திருப்பாய் 
என்று தெரியாமல் போனதுதான் 
துக்கம் 
*************************************************
 சொன்னது
சொன்னதாகச் சொன்னது
சொன்னதாகச் சொல்லப்பட்டது
சொல்லப்பட்டதைச் சொன்னது
எல்லாம் தாண்டி வரும்போது 
உன்சொல்
சாயம்போய்விடுகிறது
கத்தரிப்பூ நிறம் 
கரையத்தான் செய்யும் என்றாலும் 
புதுமெருகோடு ஒருமுறையாவது 
ரசித்து உடுத்துவதில்லையா
நேரடியாக 
என்னிடம் ஒருமுறை சொல்லிவிட்டாலென்ன


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...