வெள்ளி, செப்டம்பர் 27, 2019

துதிக்கை

கோயில் முன்நின்று ஆசீர்வதித்த யானை 
புறப்படுகிறது தங்குமிடத்திற்கு
அவசரமாக ஒருவர் 
அருகம்புல்கட்டுகளை நீட்டுகிறார்
அதே தொனியில் 
துதிக்கையைச் சுழற்றித் 
தலைதொட்டுவிட்டுப் போகிறது
பாகனுக்குப்பசி போலும்
விரைந்து எட்டு வைக்கிறான்
வாழைப்பழம் வாங்கிக்கொண்டு 

கடையிலிருந்து வந்து பார்த்த
குழந்தை

 " ஆன......" என்று அழும் குரலுக்கு 
துதிக்கை போலவே வளைந்தாடியது 
ஆனையின் வால்.

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...