ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தனிமைக் காலம்

 கைப்பிடிகளைப் பற்றாது கதவு திறக்கச் சொன்னாய்

பெருமணிகளின் நாவுகள் ஆர்வத்துடன் அக்கணம் நோக்கிக் காத்திருக்கின்றன
அசையாது
தானாய்ப்பிளந்து வழிவிடும் கடலுக்குக்
காத்திருக்கும் கூட்டத்தில் தலைச்சுமையோடு நிற்கிறேன்

************************************************
வேப்பம்பூங்கொத்துகளை இழுத்து வளைக்க ஒரு கரமும் நீளவில்லை
தார்ஊற்றப்படாத சாலையின் செம்மண்
வாகன அழுத்தத்தில்
பறக்கவில்லை
யாருமே நடக்காத பகலுக்குப் பழகிவிட்ட தெருநாய்கள் திடீரென்று தென்படுபவனைத் திருடனாக்குகின்றன

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...