வெள்ளி, அக்டோபர் 02, 2020

பாதை மாறிய பயணங்கள்

 


 

எதைக் கொண்டு வந்தோமென்றும்
தெரியாமல்
எதைக் கொண்டு போகிறோமென்றும் 
தெரியாமல்
போக வேண்டும் என்றுமட்டும் 
தோன்ற வைத்து விடுகிறீர்கள்.
அவர்களும் கிளம்பி விடுகிறார்கள்
நீங்கள் குப்பையில்
வீசியவற்றை மாட்டிக் கொண்டாவது

நம்பிக்கைதான்
நெடுஞ்சாலைகளின் மீது

அவர்களில் எவரோ வார்த்த
தார்தானே 

**************************************************************

மாறிச்செல்லாத பாதை என்று அறியப்பட்ட
தண்டவாளங்களும்
நூற்றுக்கணக்கான கருவிகளும் தாண்டி
எங்கள் பயணங்கள்
எங்கெங்கோ செல்கின்றன

இரக்கமுள்ள மனிதர்கள்
பொட்டலங்களோடு வரும்வரை
திசையறியாது நடந்துகொண்டே இருக்கின்றன
கால்கள்

கால்களுக்குப் பசிப்பதில்லை

ஆனால் அம்மா
இங்கிருந்து எங்கு செல்ல வேண்டுமெனச்
சொல்லாமல்
ஏன் உறங்குகிறாய்....




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...