ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

செம்பருத்தி கனம்

திரும்பிவந்து பார்க்கும்போது 
நிச்சயமாக இவ்விடம்தானா 
எனச்சொல்ல முடியாதபடி 
எல்லாம் மாறிப்போய்விடுகின்றன 
தூரங்களைத் தாண்டுவது 
பாதுகாப்பு என்றிருந்த நாளில் 
பாழ்பட்ட மனைக்கு என்று 
எவ்விதப் பொருண்மையும் இல்லை 
கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த 
 ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் 
 கற்றுத் தந்திருந்து கனத்தை 
புத்துருக் கொண்ட இடங்களில் 
 செம்பருத்திக்கு மண்ணில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...