வியாழன், டிசம்பர் 09, 2021

தொடக்கம் எளிது

 ஏ ஃபார்ஆப்பிளை

வரைந்துகொண்டிருக்கும்போதே

மாம்பழ நினைவு வந்து
மஞ்சள் நிறம் தீட்டிய பாப்புக்குட்டி
மஞ்சளின் நினைவில்
சரிபாதியாக சோளத்தைப்போல
மணிகள் வரைந்தாள்
பிறகு பக்கம் முழுக்க நீலம் பூசினாள்
சோளம் வாங்க
கடலுக்குப் போன கதை இப்படியாகத்தான் படமானது
உருக்கிய மெழுகை பத்திரப்படுத்தினேன்
*******************************************************
சரக்கொன்றையென வருத்தங்கள்
உதிர்ந்து கிடக்கின்றன
நிமிருமுன் பூத்தும்
தன்னுடையது
உதிர்ந்துவிட்டதென
ஆசுவாசம் கொள்ளுமுன்
என்ன மஞ்சள்
என்ன மஞ்சள்
**************************************************
தனியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது
நிலா
சிரிப்பிலும் அழுகையிலும்
நீ சேர்த்துக்கொள்ளும்போதும்
மறந்துவிடும்போதும்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...