செவ்வாய், டிசம்பர் 09, 2014
திங்கள், டிசம்பர் 01, 2014
வெள்ளி, நவம்பர் 21, 2014
செவிபடாது மிதந்தலையும் கானம்
வரி சொல்வாய்
கருவி சொல்வாய்
எத்தனையாவது நொடியில் எந்தக் கருவி முடிந்து
எது தொடங்கும்
கூட எது இழையும் என்பதும் அறிவாய்
குரல் எப்போது குழையும்
எங்கே நிமிரும்
முத்திரை விழுந்திருப்பது எங்கே
சாயல் வேறெங்கு உண்டு எல்லாம்
பிரித்துக் கலைத்து
ஆறிய தேநீரோடு பாடலை அருந்திய
நாட்களின் சாட்சியான
தோப்புமில்லை
கடைக்கார வைத்தியும் காலமானார்
ஒலிநாடாக்கள் சுழலவும் வழியில்லாது
மரப்பெட்டியின் ஓரத்தில்
தூசியோடு துயில
பதிவகங்கள் தேவையிலா உலகில்
தரவிறக்கும் தனியாளாக
நீயும் நுட்பம் கற்றிருக்கலாம்
ஏதோ ஒரு வானொலியோ ,தொலைக்காட்சியோ
வழங்கும் பாடலுக்குள் புகவியலாது
மணல் மிதிக்கும் என் பாதங்களைப்போல்
நீயும் உணர்வாயோ
19 11 14 விகடன் சொல்வனம் பகுதியில் இடம்பெற்ற கவிதை
சனி, நவம்பர் 08, 2014
எனக்குத் தெரிந்தவன்
ஊர்ப்பக்கம் போனா
பொவொண்டோ வாங்கிவாஎன்பான்
பன்னீர் சோடா மறக்காம குடி
மாயவரம் தாண்டுமுன் என்பான்
டிகிரி காபிக் கடைகள்தோறும்
குடித்துப்பார்த்து
அசல் நகல் சொல்லிடுவான்
பச்சைத்தேநீர்,பால்கலந்தது ,இஞ்சி மிளகு
எதெது எவ்வெப்போது
பட்டியல் உண்டு அவனிடம்
பழச்சாறு கடைக்காரனிடம்
நீரும் சர்க்கரையும்
அருகில் நின்று கலந்தால்தான்
திருப்தி அவனுக்கு
என் வீட்டின் காபி பில்டர்
அவன் தந்த பரிசுதான்
டிகாக்ஷன் பக்குவமும் சொல்லித் தந்தான்
மதுக்கூடமொன்றிலிருந்து
தள்ளாடி வெளியே விழுந்த
அந்த நாளில்
அவனை நான் பார்த்திருக்க வேண்டாம் -
அவன் குழந்தையோடு
வியாழன், நவம்பர் 06, 2014
கமலஹாசனின் ரசிகைகள்
ஒல்லிக்குச்சி கமல்
அவள் ஒரு தொடர்கதையில்
எச்சில் விழுங்கிப் பாடுகையில் ரசித்தவள்
மெச்சி அக்கா...
அவள் ஒரு தொடர்கதையில்
எச்சில் விழுங்கிப் பாடுகையில் ரசித்தவள்
மெச்சி அக்கா...
சப்புன்னு அறைஞ்ச கோபாலக்ருஷ்ணன்
கீதாவின் பிரியன்
கீதாவின் பிரியன்
நினைத்தாலே இனிக்கும் மைக்
சிம்லா ஸ்பெஷல் மைக்
சேர்ந்து பாட முடியா வருத்தம் பூரணிக்கு
சிம்லா ஸ்பெஷல் மைக்
சேர்ந்து பாட முடியா வருத்தம் பூரணிக்கு
வில்லனாக்கி விட்டதில்
பாரதிராஜா மேல் கொலைவெறி
சிகப்பு ரோஜா பார்த்த கிரேசிக்கு
பாரதிராஜா மேல் கொலைவெறி
சிகப்பு ரோஜா பார்த்த கிரேசிக்கு
சான்சே இல்ல -இந்த வார்த்தை
அப்போது புழக்கத்தில் வந்திருந்தால்
ராஜபார்வைக்குப்பின் தேவி
இதைத்தான் சொல்லித் திரிந்திருப்பாள்
அப்போது புழக்கத்தில் வந்திருந்தால்
ராஜபார்வைக்குப்பின் தேவி
இதைத்தான் சொல்லித் திரிந்திருப்பாள்
சரோஜினியின் கணவன் குள்ளமாக இருந்ததில்
பிரச்னை ஏதும் தெரியவில்லை
அப்புவுக்குப்பின்
பிரச்னை ஏதும் தெரியவில்லை
அப்புவுக்குப்பின்
குருவின் காலத்தில்
தொங்குமீசை விரும்பிய
சச்சு அக்கா புரிந்துகொண்டாள்
சுருண்ட மீசைக்காரன் பின்னால்
விமலா சுற்றியதை -
அது தேவர் மகன் விளைவு என்று....
தொங்குமீசை விரும்பிய
சச்சு அக்கா புரிந்துகொண்டாள்
சுருண்ட மீசைக்காரன் பின்னால்
விமலா சுற்றியதை -
அது தேவர் மகன் விளைவு என்று....
கனவுகளைப் பங்கிட
யார் யாரோ வந்தபோதும்
"கமலாசனின் "ரசிகைகள்
இருந்துகொண்டே இருந்தார்கள்
படங்களை வெட்டி ஒட்டியபடி...
பாடல்களை முணுமுணுத்தபடி...
சண்டை போடும்,சங்கடப்படும் ,
சங்கடப்படுத்தும்
கமல் ஹாசன்களையும் ரசித்தபடி....
யார் யாரோ வந்தபோதும்
"கமலாசனின் "ரசிகைகள்
இருந்துகொண்டே இருந்தார்கள்
படங்களை வெட்டி ஒட்டியபடி...
பாடல்களை முணுமுணுத்தபடி...
சண்டை போடும்,சங்கடப்படும் ,
சங்கடப்படுத்தும்
கமல் ஹாசன்களையும் ரசித்தபடி....
ஞாயிறு, நவம்பர் 02, 2014
சக உதிரிகள் அல்லது சாமான்யர்கள்
பிணமாகக் கிடக்க வரம் கேட்கும்
"முன்னிலை"யாசகர்களின் உலகில்
அவன் நுழைந்ததேயில்லை.....
கிடைத்தது தின்று
கிடைத்ததில் வாழ்ந்து
கிடைத்த வழியில் சாவான்
விருப்பத் தேர்விலாமல் ...
.
இடிந்து குலையும் கட்டிடம்
கவிழும் இரயில்
வெடிக்கும் குண்டு
எங்கும் ஒப்புக் கொடுத்தபடி
உதிர்கிறான் ...
உதிரி மனிதன் ஒருவனை
குப்பைக் குள்ளிருந்து
மீட்டெடுக்கும் மஞ்சள் தொப்பிக்காரன்
காமெராக் கண்கள் தின்ன
அவனை அனுப்பியவாறே
தானும் உதிரி சாம்ராஜ்யப் பிரஜையே
எனச் சொல்லாமல்
நகர்கிறான்
இன்னொரு காலோ கையோ
தேடியபடி...
சனி, அக்டோபர் 25, 2014
இல்லாமல் இருப்பதுவும் இருப்பு
என் பெயர் எனக்கானது என்றிருந்தேன்
பெயரின் சுருக்கம்,குறுக்கம்
எதுவும் பெருமையோடு ஏற்றிருந்தேன்
பெருமைகள் பெயருடையதா
என்னுடையதா
பிரித்தே அறியவில்லை
பிறிதொருநாள் என் பெயர் சொல்லி
எவரோ அழைத்தது
எவரையோ
என்றறிந்தபோது
அது எனதானது மட்டுமில்லை
என்றானபோது
நான் என்று உங்களிடம்
எதை அறிமுகம் செய்வது
நான் என் பெயரிலும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...






