ஞாயிறு, மே 05, 2019
தவிட்டுக்கு வாங்கிய சொற்கள்
குற்றங்களை மில்லிகிராம் குறையாது
பட்டியலிட்டு
நானும் நானும் தராசு பிடித்தோம்
நிறுத்தல் தெரியாத
உன்னுடையவை அவை
*****************************************************
தவிட்டுக்கு வாங்கிய சொற்களோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்
பெற்றவை முற்றுமிழந்து
**********************************************************
கடலைப்போல உணர்பவள் அருகே
மணலைப்போலக்கூட
உணராது
என் செய்வாய் பராபரமே
*********************************************************
சம இரவு சம பகலாம்
சம வெயிலும் சம குளிரும் இருக்காது
சமம் என்பதைச் சமம்
மாதிரிச் செய்வதும் சொல்வதும்தானே
வழக்கம்
சரி
சமம்(march 21)
************************************************
பட்டியலிட்டு
நானும் நானும் தராசு பிடித்தோம்
நிறுத்தல் தெரியாத
உன்னுடையவை அவை
*****************************************************
தவிட்டுக்கு வாங்கிய சொற்களோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்
பெற்றவை முற்றுமிழந்து
**********************************************************
கடலைப்போல உணர்பவள் அருகே
மணலைப்போலக்கூட
உணராது
என் செய்வாய் பராபரமே
*********************************************************
சம இரவு சம பகலாம்
சம வெயிலும் சம குளிரும் இருக்காது
சமம் என்பதைச் சமம்
மாதிரிச் செய்வதும் சொல்வதும்தானே
வழக்கம்
சரி
சமம்(march 21)
************************************************
கரைபுரண்ட ஆற்றைக்
காணவில்லையென்ற டிஜிட்டல் கண்ணீர்
துடைத்தபடி
குழாயைத் திருகிப் பார்த்துக்கொண்ட
நிம்மதிப் பெருமூச்சுக்குப்பின்
எவ்வளவோ இருக்கிறது
குழாயைத் திருகிப் பார்த்துக்கொண்ட
நிம்மதிப் பெருமூச்சுக்குப்பின்
எவ்வளவோ இருக்கிறது
இரண்டு சொட்டு அன்பு
மகிழ்ச்சி
அன்பு
காதல்
பாசம்
எத்தனை நல்ல சொற்கள் இல்லையா
சரி
அப்படியே இருக்கட்டும்
********************************************
நன்கு குழிந்த பாத்திரமாக எடுத்திருக்கலாம்
இப்போது பார்
இரண்டு சொட்டு
அன்பிலேயே தளும்பிவழிகிறது
*********************************************************
என்னைப்பற்றிதான்
பேசிக்கொண்டிருப்பாய்
அப்படிதானே
சரி
ஒன்றும் சொல்லாதிருந்து விடு
*****************************************************
அன்பில் மட்டுமல்ல
உன் புறக்கணிப்பிலும்தான்
மலர்கிறேன்
என்ன செய்யப்போகிறாய்
அன்பு
காதல்
பாசம்
எத்தனை நல்ல சொற்கள் இல்லையா
சரி
அப்படியே இருக்கட்டும்
********************************************
நன்கு குழிந்த பாத்திரமாக எடுத்திருக்கலாம்
இப்போது பார்
இரண்டு சொட்டு
அன்பிலேயே தளும்பிவழிகிறது
*********************************************************
என்னைப்பற்றிதான்
பேசிக்கொண்டிருப்பாய்
அப்படிதானே
சரி
ஒன்றும் சொல்லாதிருந்து விடு
*****************************************************
அன்பில் மட்டுமல்ல
உன் புறக்கணிப்பிலும்தான்
மலர்கிறேன்
என்ன செய்யப்போகிறாய்
ஒளியைப் பார்ப்பேன்
நாற்புறமும் இருளிருப்பினும்
எங்கோ சுடரும் ஒற்றைப்பொட்டு ஒளியின்
எங்கோ சுடரும் ஒற்றைப்பொட்டு ஒளியின்
துணைகொண்டு வெளிவருவேன்
வெளிச்சத்தை எதிர்கொள்ளச் சகியாது
உனது கண்கூசும் என்கிறாய் ஆதுரமாக
வெளிச்சத்தை எதிர்கொள்ளச் சகியாது
உனது கண்கூசும் என்கிறாய் ஆதுரமாக
சிம்மக்குரல் பித்தன்களும் அங்காளி சன்னதியும்
உக்கிரம் என்பது
அவளைப்பற்றிய சித்திரம்
அவளைப்பற்றிய சித்திரம்
மண்டையோட்டில்
இரவலர் வாழ்வை ஏந்தி ஆடும்
பித்தனும்
நில்லாதே செல்லாதே
என்று கட்டளையிடுகையில்
நில்லாதே செல்லாதே
என்று கட்டளையிடுகையில்
சிம்மக்குரல் பெற்றுவிடுகிறான்
கொங்கையொருபுறம்
மங்கையொருபுறமுமாக
உதிர உதிர
எதிர்த்தாண்டவம் ஆடிய
காலங்கள் தாண்டி
டாஸ்மாக்கிலிருந்து திரும்பும்
மங்கையொருபுறமுமாக
உதிர உதிர
எதிர்த்தாண்டவம் ஆடிய
காலங்கள் தாண்டி
டாஸ்மாக்கிலிருந்து திரும்பும்
பின்னிரவுப் பித்தன்களின்
தாண்டவம்
தாண்டவம்
அடுப்பைக்கூட உக்கிரமாக எரிய
அனுமதிக்கவில்லை
அவளுக்கு ஆறுதல்
அங்காளி சன்னதிகள்
அங்காளி சன்னதிகள்
கொஞ்சம் காக்கரட்டான் மல்லியும்
அள்ளிப்பூசிய நிறமுமாக
வேறுமாதிரி
வேறுமாதிரி
ஒருநாளாவது இருக்கவைக்கும்
அங்காளியைப பார்த்துதான்
இப்படி ஒரு புன்னகை
இன்று என் மூக்குத்திக்கும் உன் நிறம்தான் என்று
இன்று என் மூக்குத்திக்கும் உன் நிறம்தான் என்று
இல்லையென்ற பதிலைச்சொல்ல அனுமதியுங்கள்
என் நலம்நாடியே
என்னைக் கிழித்தெறிந்ததாக
என்னைக் கிழித்தெறிந்ததாக
நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தது
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தது
எனக்கும் தெரியும்
துண்டுக்காகிதம்தான் நான்
என்றாலும்
இல்லையென்று பதில்சொல்ல
அனுமதியுங்கள் ராசாவே
துண்டுக்காகிதம்தான் நான்
என்றாலும்
இல்லையென்று பதில்சொல்ல
அனுமதியுங்கள் ராசாவே
*********************************************************
தேநீரை ஆற்றியபடியே
நெடுநேரம் நின்ற முருகேசன்
ஸ் அப்பா பரமேசுவரா என்றலுத்தபோது
கால்மாற்றி நின்றாடும்
நெடுநேரம் நின்ற முருகேசன்
ஸ் அப்பா பரமேசுவரா என்றலுத்தபோது
கால்மாற்றி நின்றாடும்
தன்உத்தி சொல்ல
ஒரு எட்டு போயிருந்தான் ஈசன்
ஒருவாய்த்தேநீரும் பருகித்
திரும்பியபோது
வீடுமாறி வந்துவிட்டோமா
ஒரு எட்டு போயிருந்தான் ஈசன்
ஒருவாய்த்தேநீரும் பருகித்
திரும்பியபோது
வீடுமாறி வந்துவிட்டோமா
என திகைத்துப்போனான்
வௌவால் வாடையின்றி
வௌவால் வாடையின்றி
தீபப்புகை நாறும் ஒருநாள் என மறந்து
******************************************************************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...






