வியாழன், அக்டோபர் 10, 2019

சன்னலும் கதவும்

நினைவுகளைப்பார்
நினைவுகளைப்பார்
என்று விரட்டுகிறது
நினைவு
கொஞ்சம் இடைவெளிவிட்டு அடித்தாலென்ன
***************************************************************
காற்றும் வெளிச்சமும்
வெளியே
நீ
திறக்கப்போவது
சன்னலையா
கதவையா

*************************************************
பாவாடைக்குடை விரிய
கரகரவெனச் சுற்றியபோது 

கோர்த்த கரங்களைப்பற்றி
அச்சமில்லாதிருந்தது
பிறகும்
அப்படியே இருந்திருக்கலாம்

**************************************************
நானென்ன
வட்டமா
உருண்டையா
குமிழியா
உருண்டு உருண்டு
யோசித்துக் கொண்டிருக்கையில்
உடைந்துவிட்டது முட்டை

**********************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...