சனி, அக்டோபர் 12, 2019

ஐந்திலிருந்து ஐந்துக்கு

முற்றிய வெற்றிலையின் காம்பைக்கூடக் 
கிள்ளி மென்றுகொள்வாள்
துளியும் வீணாக்காத
ஆத்தா
இந்த வாழ்க்கையும் அவளைப்போல
அட சனியன் 
அதேபோல சக்கையும் விழுங்குது
***************************************************
படிகள்
பார்த்து பார்த்து
அபிக்குட்டியை எச்சரிக்கிறாள் அம்மா
தாவுவதுதான் பிடிக்கிறது அவளுக்கு
ஒன்றிலிருந்து மூன்றுக்கு
மூன்றிலிருந்து ஐந்துக்கு
அச்சோ பாத்து பாத்து
அம்மா பாவம்
போனால் போகிறதென்று
ஐந்திலிருந்து ஐந்துக்கே 

ஒருமுறை ஏறிக்கொண்டாள்
****************************************************
நடந்து நடந்து அடையாத நிழலைத் 
தாவிஓடிப் பிடித்துவிடுகிறாயே
மனப்பூனையே
மீசைமுறுக்காது
சற்றே காத்திரு
எப்படியும் அடையத்தானே வேண்டும்
நிழலையோ உன்னையோ



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...