வியாழன், அக்டோபர் 10, 2019

எப்போதோ வீசிய சொல்

எப்போதோ ருசித்த கனி
எப்போதோ நனைந்த அலை
எப்போதோ ஏறிய உயரம்
எப்போதோ வீசிய சொல்
*****************************************
நீ எங்கேயோ போகிறாய்
சொல்லிக்கொண்டுதான் போனாய்
ஆனால் நான் பயிலாத மொழி அது
பின்வரச்சொன்னாயா
காத்திருக்கச்சொன்னாயா என்றுகூடப் 
புரியவில்லை
****************************************
நீண்டகாலமாக சொல்லப்பட்டதையே 
நான் நம்பினேன்
நீலவானம் என்று
கழுவி விட்டாயிற்றா நீலத்தை
எங்கே தவறு நடந்தது
நிறமற்றது வானம்
என்பதை எப்படி எல்லோருக்கும் சொல்வது
எப்படி நம்ப வைப்பது
ஆனால்
அது அப்படித்தானே இருக்கிறது
ஒற்றைக் குரலாய்ச் சொன்னால் 

கேட்க மாட்டார்கள்
ஒரே ஒருவர் வந்தால் போதும் 

என் பக்கம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...