புதன், அக்டோபர் 09, 2019

பழுப்பேறிய காலம்



ஒட்டிய கன்னத்துடன் இருந்தபோது அம்மாவுக்கு
சற்றே பல் வெளியே நீண்டிருக்கிறது
கறுப்பு வெள்ளைப் படமென்பதால்
 அவள் சேலைக்கொசுவம் 
ஈரமாக இருந்ததா எனத்தெரியவில்லை
ஆனால் அப்படித்தான் இருந்திருக்கும்
புகைப்படமெடுக்கப் போகுமுன்
வீட்டுவேலை முடித்து வந்திருப்பாள்
நாற்காலியில் அகன்ற கால்களுடன் அமர்ந்த 
அப்பாவிடம் சாயாமல்
அம்மாவோரம் சாய்ந்த பெரியவனும்
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து
தோளில் முகம்சேர்த்த
சின்னவனுமாக
அது ஒரு பழைய குடும்பப்படம்
இப்பொழுது
அம்மா பக்கம் 
சாயவேண்டியதில்லை எவரும்
அம்மாதான் யார் பக்கமாவது

சாய வேண்டியிருக்கிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...