புதன், அக்டோபர் 09, 2019

பகிர்ந்து பருகிய தேநீர்

உனக்கென்ன.....
இது வெறுப்பா பொறாமையா
அங்கீகரிப்பா
ஆதங்கமா
நைச்சியமா
ஏகடியமா
புரியும்படி ஒரு தொனி சேர்த்தாலென்ன
இதெல்லாம் குரலைப் பொருத்தியவன் குறைபாடா
வளர்த்த கலையா
என்ன எதிரொலிப்பதென்ற
குழப்பம் தலையிடிக்கிறது பார்
******************************************************
ஊர்ப்பெயரின் மேல்
சுவரொட்டி ஒட்டிய
மைல்கல்லின் அருகே
நின்று
216 கிமீ மட்டும் தெரிய
எடுத்த படம்
இந்த வாழ்க்கை
****************************************************
என்னைத்தான் தேடுவாய் என்ற நினைவு 
கதகதப்பாய் மாறுகிறது
ஒரு தேநீரைப் பகிர்ந்து பருகி
இரண்டாய் வாங்கியிருக்கலாம்
எனச்சற்றே சிணுங்கி
கையிலுள்ள பொதிகளின்
கைப்பிடியைச் சரிசெய்து
மாட்டிக்கொண்டு
தானே சுமப்பதாக நீளும்
உன் கரிசனத்துக்குத் தலையசைத்துவிட்டு
நடப்போமே என்ற நினைவூட்டலைப் பகிரேன்
அலைபேசி ஒளிராமல் மேசைமேல் கிடக்கும் 
நடுக்கம் குறையட்டும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...