சனி, அக்டோபர் 12, 2019

ஊறியநெல்

புழுங்கும் நெல்லின்
வாசமும் ஆவியும் வீச வீச
வியர்வை வழித்தெறிந்து
அன்னக்கூடைக்கு மாற்றுவாள் தங்கம்
ஓலைப்பாயில் ஆறும் அவிந்த நெல்லிலிருந்து
நாலுஅரிசியைத் தேற்றி மெல்லும் ருசியில்
உமியை எறிகிறான்
அரியணைத் திண்டிலிருந்து 
பூச்செண்டு எறியும் அரசபாவனை
சேர்ந்து தெறிக்கிறது
மிச்சமிருந்த முன்கைச்சேறு
சிரித்துக்கொள்கிறது
அவியல்காணக் காத்திருக்கும்
ஊறியநெல்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...