புதன், அக்டோபர் 09, 2019

கண்ணீர் நதிசூழ் அறை

ஒரு மழைமாலை
இருளும் குளிருமாக இருக்க வேண்டும்
நீ அண்ணாந்து பார்த்தவுடன்
நட்சத்திரங்கள் மின்ன வேண்டும்
அப்புறம் மொறுமொறுவென ஏதாவது
கொதித்த மணத்தோடு தேநீர்
சரி
உனக்கே தெரியும்
இதெல்லாம் இதே நியமத்தில் வராதென்று
மைக்கை மாற்றிக்கொடு
வேற...வேற...

******************************************************
இடுங்கிய கண்ணும் உதடுமாகச் சிரிக்கும்
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை 

நேரலையாகப் பார்க்க முடிகிறது
மனசு பொங்கினால் போதாதா
கண்களும் சேர்ந்து கொள்ளணுமா
" அப்பா....காமராவைச் சரியா வைங்கப்பா....
முகத்தைத்தவிர உங்க ரூமெல்லாம் தெரியுது..."
சிணுங்கிச் சிரிக்கிறாள் பெண்ணரசி
இனி
பக்கத்திலொரு கைக்குட்டை 

வாகாக வைக்க வேண்டும்
*********************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...