புதன், அக்டோபர் 09, 2019

பன்னீர்ப்பயலே

நேற்று விட்டிருந்த மொக்குகள்
அகாலத்தில் வெகுதூரத்தில்  நினைவுக்கு வருகிறது
பன்னீர்ப்பயலே நீயோ ஒரு
சிணுங்கி
தொடவேண்டும் என்றே அவசியமில்லை
உன் புன்னகை அவகாசம்
ஒரேமணிநேரம்
பின்னே சுருளத்தொடங்கிவிடுவாய்
நாளைவந்து பார்க்கும்போது
எப்படி சமாதானம் சொல்லப்போகிறேனோ
ஒரு ரோஜாச்செடியைப் 
பெண்ணாகத்தான் உருவகிக்க வேண்டுமா 
 மாற்றி யோசித்த எனக்கு
பறித்துக்கொள்வதே மலருக்கு அங்கீகாரமா 
எனத்தோன்றவில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...