வியாழன், அக்டோபர் 10, 2019

பாகுபலியைப் பார்த்துக் கொள்ளுங்கள்

உளறுபவர்களின் தலையில்
ஒரு கனமுமில்லை
இது தவறென்று தயங்கிக்கொண்டிருந்தால் 
அவர்கள் நீங்களாகிவிடலாம்
தங்களைத் தாங்களாகவே காட்டிக்கொள்ள
மாறுவேடங்கள் தேவைப்படுவதில்லை அவர்களுக்கு
சரித்திரத்தையோ
சங்கீதத்தையோ
இங்கிதமின்றி ஒரு கிள்ளு கிள்ளி
உயரத்தூக்கிக் காடடுவார்கள் 

பாகுபலியை எல்லோரும்
 அடையாளம் காணவேண்டுமல்லவா
எரிச்சலில் எவனோ உடைவாளை உருவுகிறான்
அப்புறம்தான் அவனுக்கு நினைவுக்கு வருகிறது 

அரசகுமாரன் வேடம் 
இந்த நாடகத்தில் இல்லையென
அதேவேகத்தில் வாள் உறை மீள்கிறது
அனுபவக்குறைவினால் பட்ட 

சிறுகீறலின் ரத்தப்பொட்டிலிருந்து உருவாகின்றனர்
உளறுவாயர்களின் பிம்பங்கள்
ஆட்டோ ஓடவேண்டாம்
கண்ணாடி தெரிவதற்கேற்பவாவது 

கண்ணாடியத் திருப்புங்க தல

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...