வியாழன், அக்டோபர் 10, 2019

விருந்தோம்பல்

சரியாகத்தானே இருந்தது
ஆமாம்
எல்லாம்
சரியாகத்தான் இருந்தது
சரியில்லை என்பது
உங்களுக்குத் தெரியும்வரை
சரியாகத்தானே இருக்கும்
உளுத்துப்போவது உத்திரத்துக்கே தெரியாது

*******************************************************

இருநூறுமில்லி பால்வாங்கி
நான்குபேருக்கு காபி கலந்து 
மிஞ்சியபாலில் விளாவிக்குடிக்கும் 
கழனித்தண்ணி'க்கும்
ஒருகை வந்துசேரும் பொழுதில்
காபியும் விலக்கி 
விரதம் நீட்டிப்பாள் அம்மா

முதல்ஈடு இட்டிலியும்
வெங்காய சட்டினியுமாக
நசுங்காத தட்டில் அவர் பசியாற
பசியில்லையென 
தாவணி திருத்தி இறங்குவாள் அக்கா
பழையது தம்பிக்கு விட்டு
***************************************************

அத்தனை பாத்திரங்கள் இல்லாத காலத்தில்
அத்தனை ஓட்டை இருந்தது
அத்தனை மழையும் இருந்தது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...