புதன், அக்டோபர் 09, 2019

இதைவிட வேறு தருணமில்லை

கொஞ்சம் வானம்
கொஞ்சம் இருட்டு
போஷிக்காமல் மலர்ந்த
சுயம்புச்செடிகள்
தான் இரந்து நிற்பதை மறந்து
சொறிநாய்க்கு உணவிடும் ஏதிலி
இதெல்லாம் இல்லாவிடில்
என்னவாகியிருப்போம்
இந்த உலகக்கூண்டில்
அத்தனையும் பித்தானால்
தாங்குவது யார்

************************************************
இதைப்பற்றிச் சொல்ல
இதைவிட
வேறுதருணமில்லை
ஒவ்வொரு மௌனவாதையிலும்
இப்படித்தான் தோன்றித்தொலைக்கிறது

*********************************************
மூர்க்கத்துக்கான அடையாளங்கள்
என்னவென்று நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாய்
உன் பாவனை
முகந்திருப்பல்
க்கும் கள்
விழுங்கும் சொல்
தேயும் கடைசியெழுத்தின் மாத்திரை
நீளும் கைக்கு நீளாத கை
எல்லாம் நினைவிலிருந்து
தொலைய மாட்டேனென்கிறது
ஒவ்வொரு முறையும் அடையாளம் காணத்

தாமதம் ஆவது அதனால்தான்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...