புதன், அக்டோபர் 09, 2019

பழைய கண்ணாடியும் புதிய சுவரும்

கதவுகளில் பூவைச் செதுக்கிய கைகளுக்கு
முதலில் ஒரு முத்தம்
கதவு
அடைந்த வழியின் அடையாளம் என்று
அதுதான் எடுத்துச் சொல்கிறது
******************************************************
நகர்வின் பிரயத்தனங்களை
அந்த மண்புழுவின் குரலில் கேட்ட காகம்
த்சொ த்சொ என்றபடி
இருந்தது
வடை வேகும் வாசனை வரும்வரை
*******************************************************
அட்டைதாளெல்லாம் சுற்றி
வெகு கவனமாகத்தான்
எடுத்துவந்தேன்
பழைய கண்ணாடியை
புதிய சுவரில்
பொருத்தியதும்
முன் நின்றேன்
இதென்ன
உள்ளிருந்து பார்க்கிறார் எவரெவரோ
*****************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...