வியாழன், அக்டோபர் 10, 2019

கைநிறைய அன்பு

"எப்படியும் உதிரத்தானே போகிறது"
உன் சுழற்றலில் 
உதிர்ந்து கிடக்கும் ரோஜா இதழ்களை 
அதிர்ச்சியுடன் நோக்குபவளுக்கு
 உன் பதில் இதுவாகத்தான் இருக்கும்
பிய்த்துத் தின்றதைப் 
பாராதவரைப் பிழைத்தாள்
********************************************************
ஒரு கைநிறைய அள்ளிய நீரைத் 
துளித்துளியாய்க் கசியவிட்டபடியே 
மணல்வீடு நோக்கிப்போகிறாள் சிறுமி
இப்படித்தான் 
அன்பை இறைத்துவிடவேண்டுமென 
உன்னிடம் கற்றாளோ
**************************************************
வலியும் வேதனையும்
ஒட்டத்துடைத்து உறங்கப்போ
எப்படியும் காலையில்
விழுந்திருக்கும்
ஒரு பல்லிமுட்டையோ
எலிப்புழுக்கையோ

***********************************************
கடகடவென வளர்ந்து
வானத்துக்கு ஒட்டடை தட்டுவதுபோல்

 நிற்கும் மரத்துக்கு 

நீரூற்றிய உரிமை
நிழலுக்கும் ஆகவில்லை

***************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...