செவ்வாய், ஜூலை 13, 2021

என்னவாக இருக்கிறாய்


கிருஷ்ணபாதம் வரைந்த வீட்டில் ஊசியிலை மரமும் ஆடுகிறது
பெருநாளுக்குப் பிரியாணி தின்று கொடை கொடுக்கிறீர்கள்
ஆம்
எங்கள் கண்ணன் அச்சுப்
பாதங்களில் குழந்தை யேசுவும் தளிர்நடையிடுவார்
வேலுக்கும் சிலுவைக்கும் வரப்புத்தகராறில்லை
பிறையிருக்குமிடத்தில்
நட்சத்திரமும் ஜொலிக்கும்
ஆண்டாளைப்போலவே
அனீஃபாவும் பிடிக்கும்
தேவாப்பிரசன்னம்
தேடியும் தொழுவதுண்டு
கூம்பு ஒலிபெருக்கியாக இந்தமனம் எல்லா மணியோசையையும் எதிரொலிக்கும்
என்னவாகத்தான் வாழ்கிறாய்
மனுஷியாகத்தான்
போதாதா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...