வியாழன், ஜூலை 08, 2021

அவிர்ப்பாகம்

 சன்னதி வீதியைப்

படம்பிடித்துப் போட்டிருக்கிறார்கள் யாரோ

கோபுரத்திலிருந்து உலகைப் பார்ப்பதாக
பொதபொதவென்று இறங்கும் சேற்றுக்குழி
முன்னொரு காலத்தில் தண்ணீர்ப்பந்தல் இருந்த இடத்தில்
டோக்கன் கொட்டகை
நேர்ந்துவிட்ட பிராணிகளின் ஒலியில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது
வீதி உலாவின் ஆனந்தபைரவி
வரப்பிரசாதியாக மாறிவிடுமாறு
வலியுறுத்துவதை எதிர்த்து
புலித்தோலும் சூலமுமாக வேகநடை போடுகிறான் சடையன்
அவிர்ப்பாகம் வாங்கித் தருகிறேன் வா என்று இறந்தகால ஞாபகங்களோடு

பின்தொடர்கிறாள்
தாட்சாயணி
வேடப்பொருத்தம்
அழகு என்றபடி
இரண்டுரூபாய்
நாணயத்தை நீட்டுகிறான் எவனோ

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...