செவ்வாய், ஜூலை 13, 2021

கண்ணாடிரவிக்கை

 கண்ணாடிவைத்து

தைத்த ரவிக்கையும்
மஞ்சள் சேலையுமாக
தலைவி பாடிக்கொண்டிருக்கிறாள்
நெஞ்சமே பாட்டெழுது அதில்
நாயகன் பேரெழுது
என்று
அந்தக் கண்ணாடிவைத்த
ரவிக்கை தைத்த
நினைவுகளை சொல்லியபடிப்
பார்த்துக் கொண்டிருந்த
பானு அக்கா,
சட்டென என்னிடம்
பானுப்ரியாவும் இப்ப
இந்த பாட்டைப் பாப்பாங்கள்ள என்றாள்
உண்மையில் அதைத்தான் கேட்க விரும்பினாளா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...