செவ்வாய், ஜூலை 13, 2021

தின்னக் கொடு

 நம்மை நாம் தின்றுவிடாமலிருக்க

நினைவுகளைத் தின்னக் கொடுக்கலாம்
ரட்சிக்க வேண்டுமம்மா
பாடிக்கொண்டிருக்கிறார் பித்துக்குளி
நரம்பு கிள்ளிய வெற்றிலையை முழுசாக மென்றால்
உள் அண்ணம் வெந்துவிடுகிறது
காற்பகுதி கிழித்தால்
நடுத்தரத்தின் மனது
மிச்ச முக்கால் வாடாமலிருக்க வேண்டுவதே அப்போதைய கவலையாக்கி விடுகிறது
பிறிதொரு நாள் காய்ந்த வெற்றிலையும் நினைவாக
நம்மைத் தின்னக்கூடும் ******************************************************
அந்த தோல்
ரத்தத்தின் கவிச்சி வெளியே கசிந்துவிடாமல் போர்த்தி வைத்தது
குறுக்குமறுக்காக ஓடும்
சிறுநரம்புகள்
வெளிப்படும் நிழல்தான்
உங்கள் பார்வைக்குத் தெரியும்
நவீன படிமச்சித்திரம் ***************************************
யோசனைகளுக்கென நகங்கள் இருந்திருந்தால்
சுரண்டி ,கிள்ளி,
உதறி உதறி
இந்நேரம் முழுசாய்
உதிர்ந்திருக்கலாம்
*************************************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...