வியாழன், ஜூலை 08, 2021

இப்போதும் இப்போதும்

 பொடித்துப்போடாத வெல்லக்கட்டியாக

அன்பு கிடக்கிறது
வாழ்க்கை இத்தனை சப்பென்று
இருப்பதேனோ கலக்காது கலங்குகிறாய்
இருக்கிறது
ஆனால்
இல்லை

************************************************
இலந்தைவடை,கடலைஉருண்டை
கமர்கட்,தேன்மிட்டாய்,பால்பன்,ஓமரொட்டியென
இருகைவிரலுக்குள்
அடங்கியவற்றை
கண்ணாடிப்பெட்டிகளில் மட்டும் காண வாய்த்திருந்தது
ஒருசேர இருசுவை அறிய அனுமதிக்காது
அவ்வப்போது கிடைக்கும்
அஞ்சு பைசாக்கள்
நிறநிறநிறமாய்த்தொங்கும்
உப்பிய நெகிழிக்குள் உறங்கும் சுவையறியா அரும்புகள் உண்டுதானே இப்போதும் ***************************************************
இப்போதும் இருக்கிறதுதானே அந்த வானம்
ஒரு கூரை அதை மறைத்தாலும்
இப்போதும் இருக்கிறதுதானே அந்த வெளி
ஒரு கதவு அதைப் பிரித்தாலும்
இப்போதும் இருக்கிறதுதானே
அந்தப்பாடல்
சுழற்சி நின்றாலும்
இப்போதும் இருக்கிறாய்தானே நீ ***********************************************

இங்கே
இந்த நெஞ்சுக்குள்
உறைகிற கீதம்தான்
வார்த்தைகள்தான்
ஒளிந்து கொள்கின்றன
ஆரஞ்சுத்தோலாக
நினைவை உரித்து உரித்து
எடுத்துக் கொண்டிருக்கிறேன்
நெருங்கிவிட்டேன்
****************************************************************************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...