செவ்வாய், ஜூலை 13, 2021

பத்தாயத்துக்குப்பின்

 அரிசி,பருப்பு அத்தனைக்கும்

அளந்து போடக்
குவளைகள் வைத்திருக்கிறாள்
ஒன்றுக்கு இரண்டு கணக்குக்கென்றே
குக்கர் தம்ளர் உண்டு
இட்டிலி அரிசியில் கிடக்கிறது
நிறைநாழி நெல் கொண்டுவந்த பித்தளைப்படி
ஆகப்பெரிய அளவு அதுதான்
ஐந்நூறு சதுர
அடுக்கக வாழ்வில்
எத்தனை படி ஒரு மரக்கால் என்பதே
மறந்து
போனவளிடம்
எத்தனை குழி ஒரு மா'வுக்கு
எத்தனை மா ஒரு வேலியென்று
கேட்டுவிடாதீர்கள்
ஒளிந்து விளையாடிய பத்தாயம் நினைத்து
ஆத்துஆத்துப் போவாள் அம்மா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...