வியாழன், ஜூலை 08, 2021

ஆண்டவன் கதைகள்

 கழுத்துச்சங்கிலியைக்

கண்களால் துழாவுகிறவர்களைக் குழப்புகிறது அவள் குங்குமம்
கூடுதலாய் ஒரு கிள்ளு மல்லி வேறு
இருக்கிறானா இல்லையா என
ஆண்டவனாக மாற்றி அவனை யோசிக்கிறவர்கள்
இருக்கிறார்கள் இன்னும்
உலகம் எங்கேயோ போயிடுச்சு
என இழுக்காதீர்கள்
அது எப்போதும்போல் இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறது

******************************************
ஒதியமரக்கிளையில்
குடியிருந்த வீரனைத் தனித்து விட்டு
அக்கரையும் இக்கரையுமாய்த்
திசைதடுமாறி ஓடிய சனத்துக்கு
ஆசி அளிக்கவென்றே
குளம் மூழ்கி
நரைத்த நாலு முடியைத் தட்டிக்காயவிட்டுக்கொண்டு
வெறும்பாக்கை உடைத்து மென்றுகொண்டிருக்கிறான் அவன்
வெற்றிலை கிடைக்கும் எவனாவது
மண்மேடாய்க்கிடக்கும் நிலத்தைப்
பார்க்க வரும் ஆடிக்கொரு நாளில்
வந்து போகிறவன்
உருகும்போது
எதிரிலொருவன்
கிண்டலாய்ச் சொல்வான்
காத்து..மரம் இயற்கெ.
என்று
ஊரிலிருக்கும் புங்கமரம் அதுகேட்டு ஆவேசமாய் ஆடும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...