செவ்வாய், ஜூலை 13, 2021

இறக்கிவிட்ட ஊர்

 என் ஆற்றங்கரையை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போனேன்

என் ஊர்ச்சிவன்தான்
தோள் மேல் எப்போதும்
தியாகபாதம்
திருவடி தூக்குந் தருணம் உதைப்பதுபோலொரு திடுக்கிடல் வேறு
ஊர்க்கழனியெல்லாம் மனையாகிப்
பிளாஸ்டிக்கில் மூச்சுவிடும் நாளிலும்
கணுக்காலில் ஒட்டிய சேற்றைக் கழுவாத பிடிவாதமெனக்கு
ஒரு தேநீர் பருக வண்டி நிறுத்தும் வழிப்போக்கனைப் போல்
ஒட்டிலாது பார்க்கும் ஊர்
எப்போது கையசைத்து இறக்கிவிட்டது என்னை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...