செவ்வாய், ஜூலை 13, 2021

இங்கெல்லாம் யாரும் வருவதில்லை

    சுற்றுலா,சிற்றுலா எல்லாம் நின்றுபோய்

ஒளிந்து பிடிப்பவர்களின் இடமாகிவிட்டது
சீட்டு வழங்கவென்று கட்டப்பட்ட சிறு கட்டிடத்தின்
சிறு மேடை மேல் தன் அலைபேசியைக்
கண்ணாடியாக்கி முன்நெற்றி முடியைக் கோதிக்கொள்கிறாள் இல்லையில்லை
கலைத்துக் கொள்கிறாள்
பிறகு உதடு கோணி
கன்னத்தை உப்பிக்கொண்டு
என நாலைந்து சுயமிகள்
அதில் ஒன்றுக்கு
பூனை மீசையும்
கொம்பும் சிறகுமாக உருவாக்கி
யாருக்கோ அனுப்பிவிட்டு
செத்தடா மகனே என்று நடக்கிறாள்
குழம்பிய ஏரி நீருக்குள்ளிருந்து
திடுக்கிட்டு எட்டிப்பார்த்து
உள்ளோடுகிறது சற்றே பெரிய மீன்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...