வியாழன், ஜூலை 08, 2021

அதே கண்கள்

 உங்கள் கண்கள்

வறண்டு வருகின்றன என்றார் மருத்துவர்

நீண்ட சோதனைகளுக்குப்பின்
சட்டென அழுதுவிடாது
தைரியமாக இருக்கிறேன் என்று யார்யாரிடமோ சொல்லியது
நினைவுக்கு வருகிறது
திடீரென மரணிக்கும்
அன்புக்குரியவர்களின் சபையில்
விம்மாது நிற்க முடிந்த என்னைப் பார்த்து
எனக்கே கூட ஆச்சர்யமாக இருந்தது
சிவாஜியின் தொலைபேசித் தழுதழுப்பு தொடங்கி
மங்காவிடம் வீம்பு காட்டும் வள்ளிக்கு
தங்கச்சியிடம் பாடும் கொட்டாங்குச்சி ராக
டி ஆர் சிலுப்பலுக்கும்
ஆட்றா ராமா குட்டிக்கரணத்துக்கும்
புள்ளகுட்டியப் படிக்க வைக்கச் சொல்லியபடி
ரயிலேறிப் போகும்
மீசைக்காரனுக்கும்
சிந்திய கண்ணீரெல்லாம் போதாதென்று
விடுகதையா வாழ்க்கை என்று பின்னணி அலற
சால்வை புரளப்போகும் மூத்த முத்துக்களுக்கும்
கலங்கிய கண்தானே இது

என்ன மிச்சமிருக்கப்போகிறது
நிசத்துக்கு சிந்த

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...