ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

உக்கிரத்தின் நதிமூலம்

 சுருள்பொட்டலமாகக் காத்திருக்கும் செம்பருத்தி வெண்ணிலவின் சிரிப்பினைக் காணாதும் பிரதி செய்து விடுகிறது மலர்ச்சியை

உன் உக்கிரம் ஒவ்வொன்றுக்கும்
நதிமூலம் எதுவோ

********************************************
சொப்புச்சாமானில்
பாவனையாகத்
தயாராகிக் கொண்டிருக்கிறது
விருந்து
பாவனையாகச் சாப்பிட்டு முடிக்கும்
விடுதலை நோக்கி காத்திருக்கிறாள் பாப்பு
பாவனையாகச் சமைத்து முடிக்கும்
விடுதலை நோக்கி அம்மா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...