ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தலைக்குள் மத்தாப்பூ

 கொஞ்சம் சின்னதுதான் ஆனாலும் ஒரு காகிதக்குல்லாவை தலைமேல் பாவனையாக வைத்திருக்கையில் வந்துவிடுகிறது சற்றே பாப்புவின் சாயல்

இது பாப்புவா நானா என்று கேட்டுக்கொண்டு வராதீர்கள்
அவளுந்தான் பட்டென்று கன்னத்தில் கைவைத்தபடி நானாகிவிடுகிறாள் ******************************************







என்னவோ சொல்லப்போகிறேன்
என்று காத்திருந்துவிட்டு
உதிராத வசவு
தலைக்குள் சுழலச்சுழலப் போனாய் பார்
மத்தாப்பூதான்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...