ஞாயிறு, அக்டோபர் 14, 2018

21 5 18

மௌனமாக இருக்கும் ஆழியை 
என்னவென்று சொல்வது
அலை கிடக்கிறதென்றா
மிதக்கிறதென்றா
இருக்கிறதென்றா

**********************************************
முன்னறை நுழையும்
கதிர்படும் இடத்தில்
உன்னைப்போலவே
உன்படம்
மாறி அமர வேண்டுமா
என உனக்கும் சேர்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது

******************************************************
சொல்லாக விம்மலாக
கண்ணீராக புலம்பலாக
நினைவாக வெடிப்பாக
இன்னும் என்னென்னவாகவெல்லாம்
உதிர்வாய்
உதிர்ந்தே விடுவாயோ

********************************************
கதவுகள் திறந்துதான்
இருக்கின்றன
எவ்வளவை வெளியேற்ற

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...