புதன், அக்டோபர் 17, 2018

சாயமிழந்த சிற்றாடைப்பூ

குடைஜிமிக்கியின் ஓரச்சலங்கைமுத்து 
அளவே உள்ள அன்பைப்
பேரன்பு
என்கிறாய்
கோயிலின் கண்டாமணியையே
ஒத்துக்கொள்ளாத உலகத்திடம்
தருவதின் அளவும் 
பெறுவதின் அளவும் உணர்வதன் நாழி நிறை
தன்னைத்தானே 
சுற்றிச்சுழன்றாடும் சிறுமியின் சிற்றாடைப்பூ
சாயமிழந்த மலர்ச்சிக்கு முன்
ரங்கராட்டினத்தின் சக்கரம் சிக்கிக்கிடக்கிறது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...