ஞாயிறு, அக்டோபர் 14, 2018

மிதியடிகள் கைவிட்ட எசமானர்

அது நின்றுகொண்டிருக்கிறது
தான் நாய்க்குட்டி
அல்லது
பூனைக்குட்டிதான் என்ற நம்பிக்கையோடு
வாலைக்குழைத்துப்பார்த்தபடி
அல்லது
வரிகளின் நிறத்தில்
மீசைமுடி இருக்கிறதா என்று 
கண்ணை ஒருக்களித்துப் பார்த்துவிட முயற்சி செய்தபடி
ஒருக்களித்து என்ற சொல்லைக்கேட்டதும் 
உங்களுக்குப்பூர்வம் நினைவிலாடுகிறது
ஒருக்களித்துத் துயில முற்பட்ட குற்றத்துக்காக
எசமானர் பட்டம் சூட்டிக்கொண்ட
 வளர்ப்புப்பிராணிகளால் 
ஆசனம் மறுத்து வாசலுக்குத் துரத்தப்பட்ட 
எசமானர் நீரென நினைவுபடுத்த ஆனமட்டும் பார்க்கிறீர்கள்
அதுவோ
நேற்றையே மறந்துவிட்டு
துண்டுமிதியடியே சதமென அலைகிறது
அப்பிறவி அந்தயுகம்
ஒழுகும் எச்சிலில் கரைகிறதே எனக் 
கண்ணீர் விட்டு கலைந்து போகவும் கூடுமோ


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...