செவ்வாய், அக்டோபர் 23, 2018

பச்சை பீடித்த அகல்

சாய்ந்து அமர்ந்திருந்த
ஒடுங்கிச்சுருண்டிருந்த 
சுவரும் தரையும் பெயர்ந்து பெயர்ந்து
வாழ்வின் தருணங்களைக்
காலம் சப்பியெறிவதைக் காட்டிக்கொண்டிருக்க,
நடந்து ஓடி ஆடிக்கிடந்த தரையில்
உதிர்கூரையின் சருகுகளை
ஒதுக்கியபடி,
எப்போதோ ஒளிசிந்தி
மிஞ்சிய எண்ணெய்ப்பிசுக்கில் 

பச்சைபீடித்த அகலின் 
நிலையாமைக்கும் நிலைப்புக்கும் 
இடையே ஆடிப்போனதாகத் தளும்பிய பிறகும்
வாழத்தான் செய்கிறோம்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...