செவ்வாய், அக்டோபர் 23, 2018

கோடையை முடித்துவைக்கும் தூறல்

கனன்று தணியும் முச்சந்தியின் பூக்குழிகள்
உதிர்ந்த  இலைகள் பூக்கள்
புதிய காய்கள்
சற்றே நீர் ஏறும் கிணறு
கவணைகளில் சரணடையும் மாடுகள்
பள்ளி திரும்பும் சிறார்கள்
எதனாலும் நிறைவடையா கோடையை
வானம் முடித்து வைக்கையில் தூறலாய்ச்சிரித்தபடி
மெய்யாகவே முடிகிறது

************************
பாகம்பிரியாள்
 ஆண்டுக்கொருமுறை  
தவறாது குடுமிபிடி சண்டை
எத்தனை ஏச்சுபேச்சென்றாலும் 
தனிப்பொங்கலிட 
பயமுறுத்தும் பாகத்தால் 
தட்டிப்போகிறது இன்னொரு படையல்
காய்ந்த சரத்தோடு  காத்துநிற்கும் 
களத்துமேட்டு கண்ணுடையாளுக்கு



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...